வட அமெரிக்கா

மெக்சிகோ பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து சம்பவம்; இரு பெண்கள் உயிரிழப்பு!

மெக்ஸிக்கோ பல்கலைக்கழகத்தில் இளைஞனொருவன் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவாதலாஹாரா நகரிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் புதன்கிழமை (06) இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20 வயதான ஓர் இளைஞனே தாக்குதல் நடத்தியதாகவும், இளைஞனும் சம்பவத்தில காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என ஜாலிஸ்கோ மாநில வழக்குத்தொடுநர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான இளைஞனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!