பிரான்சில் சிறுவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்; 7 பேர் படுகாயம்!
பிரான்சில் சற்று முன்னர் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பிரான்ஸ் அல்ப்ஸில் உள்ள அனெசை என்றபகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்றுவயதிற்கு உட்பட்ட சிறுவர்களை இலக்குவைத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு படையினரின் துரித நடவடிக்கை காரணமாக குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.





