இலங்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணங்களில் தாமதம் – வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட நிறுவனம்

பாரீஸ் நகரில் டயர் வெடித்ததாலும், மற்ற விமானங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டதாலும் கிறிஸ்துமஸ் காலத்தில் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வாடிக்கையாளர்களிடம் விமான சேவை மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த சில நாட்களாக விமான சேவையினால் ஏற்பட்ட தொடர் இரத்து மற்றும் தாமதங்கள் உள்ளிட்ட  பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஸ்ரீலங்கன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பான காலகட்டத்தில் 2 ஏர்பஸ் ஏ330 விமானங்கள்  தரையிறங்குவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும் அது பாரிய சவாலாக இருந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள விநியோக பற்றாக்குறை காரணமாக விமான மாற்றீடுகளை மேற்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பாரிஸில் இருந்து திரும்பவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் டயர் வெடித்ததனால் ஏற்பட்ட தாமதம் தொடர்பிலும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 2 உதிரி இயந்திரங்கள் மற்றும் புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப் போக்குவரத்திற்கு தடைகள், தவிர்க்க முடியாத விமான இரத்து மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்தது.

பண்டிகைக் காலத்தில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பயணத் திட்டங்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை விரைவுபடுத்த அயராது உழைத்து வருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் தங்கள் சேவையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட A320 விமானம் ஏற்கனவே சேவையில் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இரண்டு A320 கள் அடுத்த வாரத்தில் மாற்றப்பட்ட எஞ்சின்களுடன் சேவைக்குத் திரும்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content