இலங்கை செய்தி

கட்டாரில் வேலையின்றி சிக்கியிருக்கும் இலங்கை இளைஞர்கள்

கட்டாருக்கு வேலைக்குச் சென்று தொழில் வாய்ப்பு கிடைக்காத இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலை செய்யும் இடத்தின் கடிதமோ, வேலைவாய்ப்பு ஒப்பந்தக் கடிதமோ இல்லாமல் கட்டாருக்கு பணிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டாருக்குச் சென்றிருந்த இருவரும், இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இவ்வாறே நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

உள்ளூர் தரகரிடம் தலா 05 லட்சம் ரூபா கொடுத்துவிட்டு ஜூன் 17ஆம் திகதி நாட்டை விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த இளைஞர்கள் தங்கியிருந்த விடுதியில் மேலும் 11 இலங்கை இளைஞர்கள் வேலையின்றி இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!