இலங்கை செய்தி

இலங்கை பொலிஸாருக்கு கிடைத்த சாதனம் – வீதிகளில் கடுமையாகும் நடவடிக்கை

இலங்கை பொலிஸாருக்கு SPEED GUN என்ற சாதனம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு இயக்குநர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணவல தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த SPEED GUN வழங்கப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1 கிலோமீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரத்தில் கூட ஒரு காரை குறி வைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

மேலும் இதன் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும்.

இதன் மூலம் வாகனம் ஓட்டப்பட்ட வேகம், ஓட்டுநர் புகைப்படம், வாகனத்தின் உரிமத் தகடு எண் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை