இலங்கை பொலிஸாருக்கு கிடைத்த சாதனம் – வீதிகளில் கடுமையாகும் நடவடிக்கை

இலங்கை பொலிஸாருக்கு SPEED GUN என்ற சாதனம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு இயக்குநர், மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் மனோஜ் ரணவல தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த SPEED GUN வழங்கப்பபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரவில் மிகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தக்கூடிய இந்த சாதனம், 1 கிலோமீட்டர் மற்றும் 200 மீட்டர் தூரத்தில் கூட ஒரு காரை குறி வைக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
மேலும் இதன் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோவை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியும்.
இதன் மூலம் வாகனம் ஓட்டப்பட்ட வேகம், ஓட்டுநர் புகைப்படம், வாகனத்தின் உரிமத் தகடு எண் உள்ளிட்ட பல தகவல்களைப் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)