இலங்கை

தென் கொரியாவுக்கு தாமதமாக புறப்பட்ட இலங்கை விமானம்!

தென் கொரியாவுக்குச் சென்ற இலங்கை விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 217 பயணிகளுடன் தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு செல்லவிருந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தாமதமாகியுள்ளது.

இச்சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானம் தாமதமாக புறப்படுவதற்கான அனுமதியைப் பெற்ற பின்னர் நேற்று (20.03) காலை 117 பயணிகளுடன் கொரியாவின் இன்சியான் நகருக்கு பறந்தது.

இதன்படி, கொரியாவில் பணிக்காகச் செல்லவிருந்த எஞ்சிய 100 பயணிகள் மார்ச் 24ஆம் திகதி தென்கொரியாவின் இன்சியான் நகருக்குச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த தாமதம் காரணமாக தென் கொரியாவில் அவர்களது வேலைகள் பாதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content