இலங்கை உலகம்

கின்னஸ் உலக சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

உலகின் மிகப் பெரிய மற்றும் கனமான சிறுநீரகக் கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

இலங்கை இராணுவ மருத்துவர்கள் இன்று (14) மேற்கொண்ட சத்திரசிக்சையின் மூலமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில்  கப்டன் (டாக்டர்) டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் டாக்டர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் இணைந்து, சிறுநீரக ஆலோசகர், லெப்டினன்ட் கேணல் டாக்டர். கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ மருத்துவமனையின் ஜெனிட்டோ சிறுநீர் பிரிவுத் தலைவர் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

கேணல் டாக்டர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் டாக்டர் சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் அறுவை சிகிச்சையின் போது ஆலோசகர் மயக்கவியல் நிபுணர்களாக பங்களித்துள்ளனர்.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சத்திரசிகிச்சையின்போது  13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்ட கல் அகற்றப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கின்னஸ் உலக சாதனைகளின்படி, உலகில் காணப்படும் மிகப்பெரிய சிறுநீரகக் கல் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் அகற்றப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!