இலங்கை

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைக்கு மாறும் இலங்கை!

புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அட்டையில் கைவிரல் அடையாளம், குருதி வகை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ளடக்கப்பட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு 76 சுய விபரங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது 6 முக்கிய விடயங்கள் மட்டுமே கோரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி பெயர், முகவரி, பிறந்த திகதி, பால் நிலை, தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பனவே கோரப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் புதிய டிஜிட்டல் அட்டை வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் இதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!