இலங்கை: ஆலய வளாக கிணற்றில் தவறி விழுந்து பாடசாலை மாணவிகள் இருவர் பலி

முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் வீழ்ந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த இருவரும் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகக் கோவிலுக்குச் சென்ற போது தவறி, கிணற்றுக்குள் வீழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
உயிரிழந்த இருவரும் 15 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)