இலங்கை

இலங்கை – றக்பி போட்டியில் தேசிய மட்டத்திற்கு முன்னேறிய திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தின் அணியினர்!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி போட்டியில் திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயம் பெண்கள் அணி மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான றக்பி போட்டியானது நேற்றைய தினம் (05.08.2025) கந்தளாய் லீலாரத்ன மைதானத்தில் நடைபெற்றது.

இப் போட்டியில் திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட 20 வயது பெண்கள் அணி கிழக்கு மாகாணமட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வெறுமனே இரண்டாம் நிலைப்பிரிவில் 150 மாணவ, மாணவிகளைக் கொண்டு, அதிகஷ்டப் பிரதேசத்தில் இயங்கும் இப் பாடசாலை தமது வரலாற்றில் முதல் தடவையாக றக்பி விளையாட்டில் களமிறங்கி வராலற்று வெற்றியினைப் பெற்றிருக்கின்றமை குறிப்பித்தக்க விடயமாகும்.

அதேவேளை ஆண்கள் றக்பி அணி கால் இறுதிப் போட்டியில் பங்கு பற்றியிருந்த போதிலும் வெற்றி பெறத் தவறியது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்