இலங்கை

இலங்கை: திருகோணமலையில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த மூவர் கைது!

திருகோணமலை தம்பலகாமம்-பொலிஸ் பிரிவுக்கு கல்மெடியாவ பகுதியில் சட்டவிரோத விடுதியொன்றினை நடாத்தி வந்த ஆண் ஒருவரும் இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று (02) மாலை இடம் பெற்றுள்ளது.

தம்பலகாமம் -கல்மெடியாவ பகுதியில் தேநீர் கடையொன்றினை நடாத்தி வருவதைப் போன்று சட்டவிரோத விடுதி நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த தேநீர் கடையை சோதனையிட்ட போது தேநீர் கடைக்கு பின்னால் அரையொன்றில் தங்கியிருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மற்றும் ரத்னபுர பகுதிகளைச் சேர்ந்த 35 வயது உடையவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 27 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!