இலங்கை

இலங்கை – ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

இலங்கையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓய்வூதியத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஓய்வு பெற்ற சமூகத்தினரை பாதிக்கும் 700000 பிரச்சினைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம். ஓய்வு பெற்ற அமைப்புகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

இன்னும் சில பிரச்சினைகளை நாம் அடையாளம் காணாமல் இருக்கலாம். இருப்பினும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்பை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!