இலங்கை

முதல் முறையாக விதை வகைகளை ஏற்றுமதி செய்யும் இலங்கை!

இந்த நாட்டில் முதல் தடவையாக பல வகையான விதைகளை ஏற்றுமதி செய்ய இலங்கை தயாராக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, பல வகையான மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய் , வெண்டிக்காய் மற்றும் சோளம் ஆகியவை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்த விதைகளுக்கு பல நாடுகளில் இருந்து அதிக தேவை உள்ளது.

இந்த புதிய வகை விதைகள் குறித்து வேளாண் துறை, அதன் வல்லுநர்கள் மற்றும் தனியார் துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்படி, இவ்வருடம் மேற்படி விதை ரகங்களில் சில முதன்முறையாக ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், பல்வேறு பயிர்களின் விதைகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதிலும், எமது நாட்டில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றமை பாராட்டத்தக்கது.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்