இலங்கை

இலங்கை : அரசாங்கத்திற்கு அவசியமான வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி!

அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பொதுவாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல அரச நிறுவனங்களின் அத்தியாவசிய பணிகளுக்காக ஒரு சில வாகனங்களை மாத்திரம் கொண்டு வருவதற்காகவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு இரண்டு பேருந்துகளும், சுகாதார அமைச்சுக்கு இருபத்தி ஒரு டபுள் வண்டிகளும், நடமாடும் மகப்பேறு மருத்துவ மனைகளுக்கு மூன்று வாகனங்களும், தொழிலாளர் அமைச்சுக்கு ஒரு வாகனமும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு மூன்று பயணிகள் பேருந்துகளும் மட்டுமே இதன் மூலம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார். .

இவை அனைத்தும் வெளிநாட்டு உதவியின் அடிப்படையிலேயே இந்த நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content