இலங்கை: ஹொரணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
ஹொரணையில்(Horana) உள்ள சிரில்டன் வட்டே(Sirildon Watte) பகுதியில் நேற்று(02) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்களை அடையாளம் காணவும், தாக்குதலுக்கான காரணத்தைக் கண்டறியவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
(Visited 4 times, 1 visits today)





