இலங்கை -மாலைதீவு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆராய்வு!
இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் Masood Imad, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தம் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது பரஸ்பர முக்கியத்துவம் மிக்க விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
குறிப்பாக, இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு துறைகளில் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இலங்கை பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.
மாலத்தீவுடன் பாதுகாப்புத் தொடர்புகளை மேலும் விரிவுபடுத்த இலங்கை உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இச்சந்திப்பில் மாலைதீவு பிரதி தூதுவர் Fathimath Ghina வும் பங்கேற்றிருந்தார்.





