தடகளப்போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த இலங்கை!

17 வருடங்களின் பின்னர் இன்று (02.10) ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் போட்டியில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.
400 மீற்றர் கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் கலப்புத் தொடர் ஓட்ட அணி இரண்டாம் இடத்தைப் பெற்ற போதிலும், அது சட்டவிரோத வெற்றி என போட்டி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
போட்டியில் இணைந்த இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றொருவரின் பாதையைத் தொட்டதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை ஏற்கனவே மேன்முறையீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)