இலங்கை செய்தி

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகிக்க முடியாத நெருக்கடி நிலை

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்,

மேற்படி சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தாலேயே சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு சுமார் ஐந்து இலட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்த அவர், இந்த தாமதம் காரணமாக சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மேலும் இரண்டு மாத காலங்கள் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை