இலங்கை

இலங்கை : களனி பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தம்!

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று (04.12) களனிப் பல்கலைக்கழகத்தின் கற்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனையவை நேற்று பிற்பகல் 2 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, மாணவர் நிலையத்தின் நுழைவு வாயிலில் கட்டப்பட்டதாக, களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார். .

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!