இலங்கை

இலங்கை: ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கோர விபத்து : நால்வருக்கு நேர்ந்த கதி

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று பிற்பகல் குறித்த விபத்து சம்பவித்துள்ளதுடன் முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வரும் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டகலை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

(Visited 15 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்