இலங்கை

இலங்கை – முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப்பொருள் மீட்பு!

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் நேற்று (19.11)  மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை கைவிட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திலிருந்து  பொதி செய்யப்பட்ட  4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும்  4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை  பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,  சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்