இலங்கை

இலங்கை: அரிசி மற்றும் தேங்காய் தொடர்பில் வர்த்தக அமைச்சரின் அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர் 04) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாளாந்தம் 200,000 கிலோ அரிசியை வழங்க அரிசி ஆலைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனை சங்கிலியான லங்கா சதொச ஊடாக உள்ளூர் சந்தைக்கு இந்த அரிசி கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

புறநகர் பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் ஒரு மில்லியன் தேங்காய் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தேங்காய்கள் அடுத்த இரண்டு வாரங்களில் 130 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்