இலங்கை மக்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை

இலங்கையில் 119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
119 பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு வரும் பெரும்பாலான முறைப்பாடுகள் உண்மைக்கு புறம்பானதாக உள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)