இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு விசே டஅறிவிப்பு

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு பயணத்தை குறைக்குமாறும் பணியிடங்களில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்துகிறார்.

ஈரானில் தெரிவு செய்யப்பட்ட பல இடங்களில் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் ஏவுகணைகளை ஏவியுள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நிலைமை உருவாகும் என அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு தூதுவர் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஈரான், ஈராக், லெபனான், சிரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 47 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை