இலங்கை செய்தி

ISIS குறித்து விசாரணை நடத்த விசேட குழு நியமனம் – தேசபந்து தென்னகோன்

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் நாட்டில் தங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தற்போது உடனடி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கடுவெலவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்னகோன், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது எனா தெரிவித்தார்.

“தினசரி முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு நாளும் குழுவுடன் நான் விவாதித்து, அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்குகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக வெற்றிகரமாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் உங்களுக்குத் தெரிவிப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
Skip to content