தென் கொரியாவில் காதலியை கொலை செய்து குளிர்சாதனப் பெட்டியில் உடலை வைத்த காதலன்
தென் கொரியாவில் நபர் ஒருவர் தனது காதலி தன்னை அவமானப்படுத்தியதால் அவரைக் கொலை செய்து அவரது உடலைக் குளிர்சாதனப் பெட்டியில் பல மாதங்களாக மறைத்து வைத்துள்ளார்.
அதன் பின்னர், அவர் காதலியைப் போலவே நடித்துக் குடும்ப உறுப்பினர்களுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
40 வயதுடைய அந்தக் காதலன், கடந்த ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் குன்சானில் உள்ள ஒரு வீட்டில் தனது காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பங்குச் சந்தை முதலீடுகள் குறித்த தனது ஆலோசனையைப் பின்பற்றாததற்காகக் காதலி தன்னைக் கண்டித்ததால் இந்தக் கொலை நடந்துள்ளது.
கொலைக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருடம் கிம்ச்சி குளிர்சாதனப் பெட்டியில் காதலியின் உடலை அந்தக் காதலன் மறைத்து வைத்துள்ளார்.
இந்த நேரத்தில், அவர் தனது தொலைபேசியில் குடும்ப உறுப்பினர்களுடன் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் உயிரிழந்தவராக நடித்துள்ளார்.
மேலும், அவர் தனது உயிரிழந்த காதலியின் பெயரில் 60,562 அமெரிக்க டொலர் வங்கிக் கடனைப் பெற்றிருந்தார் எனவும் தெரியவந்துள்ளது.





