இலங்கை செய்தி

8,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தென் கொரியா

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 8,000 இலங்கையர்களுக்கு தென் கொரிய வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

தென் கொரியாவிற்கு தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் 16 நாடுகளில், இலங்கையிலிருந்து உயர் திறன்களைக் கொண்ட தரமான தொழிலாளர்களை அனுப்புவதற்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதன் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.

தென் கொரியாவில் வேலைக்காகச் செல்லும் 96 இலங்கையர்களுக்கு விமான டிக்கெட்டுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!