இந்தியா

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி அவசர கடிதம்!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் திகதி முதல் 22-ந் திகதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தியின் கடிதம், அதானி குழுமத்திற்கு எதிரான புதிய குற்றச்சாட்டுகள், விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை, விவசாயிகளின் MSP உயர்வுக்கான கோரிக்கைகள், மணிப்பூர் நிலைமை, வகுப்புவாத பதட்டங்களின் அதிகரிப்பு, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அவசியம், சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட ஒன்பது விவகாரங்களில் பாராளுமன்ற விவாதத்தின் அவசியத்தை எடுத்துரைத்துள்ளது.

பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை இன்னும் வெளியிடாததால், சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) கூட்டத்தில் முடிவு செய்தது.

இந்நிலையில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது, “செப்டம்பர் 18 முதல் ஐந்து நாள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை நீங்கள் கூட்ட உள்ளீர்கள். வேறு எந்த அரசியல் கட்சிகளுடனும் கலந்தாலோசிக்காமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு உள்ளது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்களுக்கு அதன் நோக்கம் பற்றி எந்த யோசனையும் இல்லை.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன் சிறப்பு அமர்வில் விவாதிக்கப்பட வேண்டிய 9 முக்கிய விசயங்களை பட்டியலிட்ட சோனியா காந்தி, “இவை குறித்து விவாதிக்க சட்ட விதிகளின் படி நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என கூறி உள்ளார்.

 

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!