ஆசியா

சீனாவில் தந்தை திட்டியதால் போதைப்பொருள் வைத்திருந்ததைக் காவலர்களிடம் புகாரளித்த மகன்

பிறந்தநாளுக்கு முன்பே வீட்டுப்பாடத்தை முடித்தாக வேண்டும் என்று தமது 10 வயது மகனிடம் கூறியிருந்தார் சீனாவைச் சேர்ந்த ஒரு தந்தை.

ஆனால், வீட்டுப்பாடத்தை அந்த மகன் முடிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்தத் தந்தை சிறுவனைத் திட்டினார்.உடனே, அந்தச் சிறுவன் தன் தந்தை போதைப்பொருள் வைத்திருப்பதாகக் காவலர்களிடம் புகார் அளித்துவிட்டார்.

சீனாவின் யின்சுவான் பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தில், சிறுவன் திட்டு வாங்கியதும் வீட்டை விட்டு வெளியேறி, கடை ஒன்றில் தன் தந்தை மீது காவல்துறைப் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

அபின் என்ற போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கசகசாவைத் தன் தந்தை வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக அந்தச் சிறுவன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

புகார் கிடைத்ததும் காவல்துறை அதிகாரிகள், சிறுவன் இருந்த கடைக்குச் சென்று அவனுடன் வீட்டுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சிறுவனின் தந்தை மறைத்து வைத்திருந்த கசகசாவை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மருத்துவச் சிகிச்சைக்காக தாம் அதை வைத்திருந்ததாகச் சிறுவனின் தந்தை கூறி, தமது வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டார்.ஆனால், இறுதியில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்