உலகம்

மதுரோ அரசாங்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுதலை!

அரசியல் கைதிகளாகக் கருதப்படும் சிலரை  நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இரட்டைக் குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட  ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்களில் மனித உரிமை ஆர்வலரான  ரோசியோ சான் மிகுவல் ( Rocio San Miguel) உள்ளடங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவின் தேசிய சட்டமன்றத்தின் தலைவரும் அதன் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிகஸின் சகோதரருமான ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ், விடுவிக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை அல்லது அடையாளத்தைக் குறிப்பிடாமல், “கணிசமான எண்ணிக்கையிலானவர்கள்” உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்திருந்தார்.

வெனிசுலாவில் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையாகும். குறிப்பாக தேர்தல்கள் அல்லது போராட்டங்களைச் சுற்றியுள்ள அடக்குமுறை அதிகரிக்கும் தருணங்களில் பலர் இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!