ஆஸ்திரேலியா

ராணுவ வீரர்கள் பற்றாக்குறை: நிரந்தர குடியிருப்பளர்களையும் சேர்த்துக்கொள்ளவிருக்கும் ஆஸ்திரேலியா

ஆஸ்‌திரேலியாவில் ராணுவ வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் நிரந்தர குடியிருப்பாளர்களை அது தனது ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இருக்கிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக நியூசிலாந்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆஸ்திரேலிய நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலிய ராணுவத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவர்.

தனிப்பட்ட விவரங்களை அலசி ஆராய்ந்த பிறகு, அதில் பிரச்சினை ஏதும் இல்லை என்றால் நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆஸ்திரேலிய ராணுவத்தில் சேரலாம். அதுமட்டுமல்லாது, அவர்கள் ஆஸ்திரேலியாவில் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு வசித்திருக்க வேண்டும் என்று ஜூன் மாதம் 4ஆம் திகதியன்று தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்‌திரேலிய ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர்கள் அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வேறு நாடுகளின் ராணுவத்தில் சேவையாற்றியிருக்கக்கூடாது.

ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 358 அதிகரித்து 58,600ஆகப் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய ராணுவம் கொண்டிருந்த இலக்கைவிட இது 5,000 குறைவு.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content