இந்தியா செய்தி

ஒடிசாவில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக தனியார் விமானம் – அறுவர் காயம்

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமான ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நகருக்குப் புறப்பட்ட சிறிய ரக தனியார் பயணிகள் விமானமொன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதில் விமானத்தில் இருந்த அறுவரும்சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

சிறிய நகரங்களுக்கும் விமான சேவையை வழங்கும் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் இந்த விமானத்தை இந்தியா ஒன் ஏர் விமான நிறுவனம் இயக்கியது.

புவனேஸ்வரில் இருந்து புறப்பட்ட 50 நிமிடங்களுக்குள், விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானி முறைப்பாடு அளித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியா ஒன் ஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விமானம் புறப்பட்டு 50 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் பணியாளர்கள் தொழில்நுட்பச் சிக்கல் குறித்து முறைப்பாடு அளித்தனர்.

மேலும், பாதுகாப்பு நடைமுறைகளின்படி மே-டே அழைப்பை விடுத்தனர்.

இதேவேளை, விமானிகள் உறுதியுடனும் தொழில்முறை திறனுடனும் செயற்பட்டு மதியம் 1.20 அளவில் ரூர்கேலாவில் இருந்து சுமார் 15-20 கிலோ மீற்றர் தொலைவு உள்ள ஒரு வெட்டவெளி பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.

விமானத்தில் இரண்டு பணியாளர்களும், நான்கு பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!