இலங்கை

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பில் திறக்க நடவடிக்கை!

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவும் திட்டம் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையை விட பெரிய மருத்துவமனை கொழும்பில் கட்டப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

அந்த நிலத்தில் சர்வதேச அளவில் பெரிய பல்கலைக்கழகம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் காலி முகத்திடலைச் சுற்றியிருந்த போராட்ட நிலைமை காரணமாக அந்த முதலீட்டாளரின் வருகை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்த முதலீட்டாளர்களை ஆர்வத்துடன் துறைமுக நகருக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!