ஆசியா

சிங்கப்பூர் – ஹோட்டலில் வைத்து மனைவியை கொன்ற இலங்கையர்!

இலங்கையர் ஒருவர் தனது மனைவியை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் ஈஸ்ட்கோஸ்ட் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனது மனைவியை கொலை செய்த நபர் இலங்கையைர் ஒருவர் சரணடைந்துதான் கொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு எதிராக சிங்கப்பூர் பொலிஸார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். சிங்கப்பூரின் கட்டொங்கில் உள்ள ஹொலிடே இன் எக்ஸ்பிரசில் தங்கியிருந்த இலங்கையரே தனது மனைவியை குத்திக்கொலை செய்துள்ளார்.

மனைவியை கொன்ற பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து நடந்ததை தெரிவித்தவேளையே பொலிஸாருக்கு உண்மை தெரியவந்துள்ளது.

ஹோட்டலிற்கு விரைந்து சென்ற பொலிஸார் உயிரிழந்த மனைவியின் உடலையும், ஹோட்டல்அறையிலிருந்து கத்தியையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதனையடுத்து சந்தேகநபரான இலங்கை கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!