வட அமெரிக்கா

சீக்கிய தலைவர் கொலை – விசாரணையில் கவனம் செலுத்தியுள்ள கனடா

சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை குறித்த விசாரணையில் இனி கவனம் செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் நிஜ்ஜாரின் கொலைக்கும் சம்பந்தமிருப்பதாகக் கூறுவதை விடுத்து விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாக அவர் கூறினார்.

இருநாட்டு அரசாங்கமும் உண்மையைக் கண்டறிந்து முறையான வழியில் தீர்வு காண அது வழி வகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசதந்திரிகளைக் குறிவைத்து கனடாவில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் வேவு அமைப்பின் ஆதரவில் கனடாவில் உள்ள இந்திய அரசதந்திரிகளுக்கும் குடிமக்களுக்கும் எதிராக வன்முறை ஆர்ப்பாட்டம் நடக்கவிருப்பதாய் புதுடில்லியின் வேவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்