தலவத்துகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம்! பொலிஸார் தீவிர விசாரணை
தலவத்துகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, தலவத்துகொட வெலிபாரா பகுதியில் உயிரிழந்தவரின் வீடொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தமை தொடர்பில் தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 9 times, 1 visits today)