இலங்கை செய்தி

கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு!!! ஒருவர் பலி

இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளினால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இரவு 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இன்று (21) இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இறைச்சிக் கடையில் பணிபுரிந்த 40 வயதுடைய நபர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இரத்மலானையில் உள்ள அராலிய வீடமைப்பு வளாகத்தில் வசிக்கும் அனுர தேசப்பிரிய அல்லது ‘கலுவ’ என்ற நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் அல்லது சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

(Visited 13 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!