டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு – மூவர் உயிரிழப்பு!! மூவர் ஆபத்தான நிலையில்!
டெக்சாஸின் ஆஸ்டினில் (Austin) உள்ள மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
நகரின் பொழுதுபோக்கு இடமான புஃபோர்டில் (Buford) இன்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த 14 பேரில், மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காலை 1:39 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு வந்ததாகவும், தகவல் கிடைத்து சுமார் 57 வினாடிகளுக்குள் பொலிஸார் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது துப்பாக்கியுடன் மக்களை அச்சுறுத்திய ஆண் சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதில் தாக்குதல்தாரி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





