இலங்கை

இலங்கையில் மற்றுமொரு ஆசிரியரின் அதிர்ச்சி செயல்! பல மாணவிகள் பாதிப்பு

பொலன்னறுவை பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு மேலதிக வகுப்பின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் உள்ள மேலதிக வகுப்பு ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் பல சந்தர்ப்பங்களில் குறித்த ஆசிரியர் சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதுடன், துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 6 சிறுமிகளின் பெற்றோரினால் பொலன்னறுவை பொலிஸார் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தில் காவல்துறையினரிடம் முறைப்பாடளிக்காமல் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 41 வயதான குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இதேபோன்றதொரு சம்பவம் களுத்துறை பகுதியில் பதிவாகியிருந்ததுடன் 16 பாடசாலை சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியர் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!