இலங்கையில் அதிர்ச்சி: தந்தை – மகள் சுட்டுக்கொலை: மகன் படுகாயம்

காலி – மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அங்கு 6 வயது சிறுமி ஒருவரும் 39 வயது ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மகன் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடையாளம் தெரியாத நபர்கள் குழுவினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு குழுவை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மகள் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.