வட அமெரிக்கா

பைடனை மிரட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிராக இணையவழி அச்சுறுத்தலை விடுத்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.

யுட்டாவிற்கு ஜோபைடன் விஜயம் மேற்கொள்வதற்கு சில மணிநேரங்களிற்கு முன்னர் அந்த நபரை கைதுசெய்வதற்காக வீட்டிற்கு எவ்பிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதன் போது இடம்பெற்ற சம்பவத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கிரெய்க் ரொபேர்ட்சன் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார், இணையவழி மூலம் பைடனிற்கும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பிற்கு எதிரான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதிகாரிக்கும் எதிராக ரொபேட்சன் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார் என குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

முகநூலில் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்த ரொபேட்சன் துப்பாக்கிகளின் படங்களையும் பதிவுசெய்திருந்தார்.அமெரிக்க நியுயோர்க் சட்டமா அதிபர்களுக்கு எதிராகவும் ரொபேட்சன் மரணஅச்சுறுத்தலை விடுத்தார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

பைடன்யுட்டாவிற்கு வருகின்றார் என அறிந்துள்ளேன் எனதுப்பாக்கிகளை தூசி தட்டி தயாராகின்றேன் என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!