இந்தியா

மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியரை நிர்வாணப்படுத்தி தெருவில் ஊர்வலம் ..!

இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீட் பயிற்சி ஆசிரியரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் நீட் பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு, விவேக் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.இவர், அங்கு படித்து வரும் 17 மாணவி ஒருவரை படிப்பு சொல்லி தருவதாக கூறி காபி குடிக்க ஹொட்டலுக்கு அழைத்துச் சென்றார். அந்த மாணவி ஆசிரியர் கூறுவதை நம்பி அவருடன் சென்றுள்ளார்.

அங்கு அவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர், விவேக்குடன் பணியாற்றும் சக ஆசிரியரான சைலேந்திரா என்பவர், மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு இதனை பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் நீட் பயிற்சி மையத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு ஆசிரியர் விவேக்கை பிடித்து அவரது ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலம் நடத்தினர்.

பின்னர், ஆசிரியரை பொலிஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, பொலிஸார் விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!