விசாரணைக்கு வரும் நோர்வே இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்!
நோர்வேயின் பட்டத்து இளவரசரான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருடைய வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்லோ (Oslo) மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 38 குற்றச்சாட்டுகளுக்கான குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் கற்பழிப்பு, ஒரு முன்னாள் துணைக்கு எதிரான நெருங்கிய உறவில் துஷ்பிரயோகம், மற்றொருவருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் மற்றும் 3.5 கிலோ (7.7 பவுண்டுகள்) கஞ்சாவை வைத்திருந்தமை ஆகியவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
அத்துடன் கொலை மிரட்டல் மற்றும் போக்குவரத்து மீறல்கள் உள்ளிட்ட பிற குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
மார்ச் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் விசாரணையில் அவரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.





