செய்தி

இலங்கையில் கடும் வறட்சி – மலையகத்தில் மீண்டும் தோன்றிய புராதன இடிபாடுகள்

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையுடன் காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு வேகமாக குறைந்து வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 44 அடியாலும், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு 49 அடியாலும் குறைந்துள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணியின் போது நீரில் மூழ்கிய பழைய மஸ்கெலியா நகரின் கோவில், இந்து ஆலயம் உள்ளிட்ட பல இடிபாடுகள் மீளத் தோன்றியுள்ளது.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!