இலங்கை

இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்!

வாக்கு அரசியலுக்கு ஆசைப்பட்டு, தொல்பொருள் சின்னங்கள் மீது கை வைப்பதை ஜனாதிபதி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்ட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘வாக்குகளுக்கு ஆசைப்பட்டு,  இந்நாட்டின் தொல்பொருட் சின்னங்களில் கை வைக்க வேண்டாம்.  இதில் கை வைத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

இந்த நாட்டில் இன்று பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 11 ஆயிரத்து 500 சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும்  38 துப்பாக்கிப் பிரயோக சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.  நாட்டு மக்களுக்கு இவ்வாறு பாதுகாப்பே இல்லாத நிலையில்தான் அரசாங்கம் நாட்டை முன்னேற்றிக் கொண்டிருப்பதாக மார் தட்டிக் கொண்டிருக்கிறது.

இப்படியான தரப்பினருடன் இணைந்து  நாட்டை முன்னேற்ற நாம் ஒருபோதும் தயாராக இல்லை’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்