இலங்கை

இலங்கையின் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பருவகால மாற்றங்கள் – விசேட அறிவிப்பு!

இலங்கை மற்றும் அதனைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் உருவாகி வரும் பருவ கால நிலை மாற்றங்களால் எதிர்வரும் நாட்களிலும் மழையுடன் கூடிய வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறையிலும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்லமுன் அவதானம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்