பிரித்தானியாவில் குழந்தைகள் திரை நேரத்திற்கு கட்டுப்பாடு – அரசு புதிய பரிந்துரைகள்
பிரித்தானியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திரை பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய அரசாங்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் தினமும் அதிகபட்சம் ஒரு மணி நேரம் மட்டுமே திரைகளைப் பயன்படுத்த வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தனியாக திரைகளைப் பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து திரைகளைப் பயன்படுத்தவும், வேகமான வீடியோக்களைத் தவிர்க்கவும் இந்த வழிகாட்டுதல் வலியுறுத்துகிறது.
இதேவேளை, கதைகள் வாசித்தல் அல்லது உணவு நேரங்களில் விளையாட்டுகள் போன்ற “திரை மாற்று” செயல்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த வழிகாட்டுதல் ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் நடைமுறை ஆலோசனையாகும். இருப்பினும், புதிய ஆய்வுகள் வெளியாகும் போது இது மீளாய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட நேரம் தனியாக திரைகளைப் பயன்படுத்துவது குழந்தைகளின் தூக்கம் மற்றும் உடல் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.
எனவே, பெற்றோர்கள் தங்களின் திரை பழக்கங்களிலும் கவனம் செலுத்தி, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





