உலகம்

பிரேசிலில் வாட்டி வதைக்கும் வெப்பம் – கவலையில் மக்கள்

பிரேசிலில் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைப்பதாக தெரியவந்துள்ளது.

அங்கு என்றும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை 44.8 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. பிரேசிலின் அராஸுவாய் (Araçuaí) நகரில் அந்த வெப்பநிலை பதிவானது.

El Nino பருவநிலை மாற்றம் இந்த மிதமிஞ்சிய வெப்பநிலை ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது.

வெப்பம் இந்த வாரம் தணியக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 3 மாநிலங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை எட்டும் என்று பிரேசில் தேசிய வானிலை நிலையம் கூறியது.

இந்த வெப்பநிலை காரணமாகப் பிரபல இசைக் கலைஞர் டெய்லர் சுவிஃப்ட் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடத்தும் இசை நிகழ்ச்சியை ஒத்திவைத்தார்.

இதற்குமுன்னர் 2005ஆம் ஆண்டு பிரேசிலில் 44.7 டிகிரி செலசியஸ் அளவுக்குக் கடுமையான வெப்பம் பதிவானதாக தெரியவந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!