Site icon Tamil News

பிரான்ஸில் பாடசாலை ஒன்றுக்குள் ஏற்பட்ட பரபரப்பு – மாணவன் படுகாயம்

பிரான்ஸில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 10 வயதுடைய மாணவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

திங்கட்கிழமை இச்சம்பவம் Créteil (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள l’école Savignat பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் வைத்து ப்ளேட் கத்தி மூலம் (box cutter) மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனைத் தாக்கிய்யுள்ளார்.

இரு தடவைகள் முதுகில் குத்தப்பட்ட நிலையில், மாணவன் Créteil மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 வயதுடைய மாணவி ஒருவரும் தொடர்புபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Exit mobile version