இலங்கை

திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள சரோஜா வேலைத்திட்டம்

காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள் சரோஜா வேலைத்திட்டம் திருகோணமலை-மொரவெவ காவல்துறை பிரிவில் (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மொரவெவ காவல்துறை பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் கீழ் பிரதேசத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் “சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள்”என எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டில் அதிகரித்து வருவதினால் பொலிஸ் திணைக்களத்தினால் பொதுமக்களை தெளிவூட்டும் விதத்தில் நாட்டில் அனைத்து காவல்துறை நிலையங்களிலும் குறித்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ள நிலையில் அனைத்து காவல்துறை பிரிவுகளிலும் கிராமம் கிராமமாக சென்று பொது மக்களையும் சிறுவர்களின் பெற்றோர்களையும் தெளிவுபடுத்தி வருவதுடன் அவசர தொலைபேசி இலக்கங்களையும் விநியோகம் செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(Visited 14 times, 9 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்